இனிமையாய்
மட்டுமே
இருந்துவிடுமா
வாழ்வு
கசப்பும்
வந்து வந்து தானே போகும்
அது
வாழவும் தேவை வாழ்க்கைக்கும் தேவை
வாழ்வுக்கும்
தேவை
உணவில்
கூட
கசப்பு
இல்லாத இனிமையை
மனம்
என்றும் நாடலாம்
கசப்பு
தேடாத நாவுக்கு
பின்னாளில்
பிணி மூலம்
குப்பிகளில்
அடைத்து அதற்கு
கொஞ்சம்
இனிமையூட்டி
குடித்தே
ஆக வேண்டுமென்று
மருத்துவரின்
பரிந்துரை நிர்பந்திக்கலாம்
வசந்தகாலங்களால்
மட்டுமே
அலங்கரிக்கப்படாது
வாழ்வு
சில
நேரங்களில் மகிழ்ச்சி மேட்டில்
துள்ளல்புரிகையில்
கூட
முகட்டிலிருந்து
உருள நேரலாம்
நீர்வீழ்ச்சியில்
தலை நனைத்திருக்கும் நம்மை
திடீரென
கொதிநீர் கொப்புலங்கள் கூட அனுகலாம்
மிக
மென்மையாய் இருக்கும்
வெல்வெட்
கேக்கில் கூட
கற்கள்
இருந்து நம் பற்கள் உடைபடலாம்-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
மே -08, 2007
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக