25 அக்டோபர் 2018

கனத்தில் உடல் சாரும்!

அளவுக்கும் மீறிய துன்பத்திலோ..
அலகுகள் இல்லா இன்பத்திலோ

மனம் தோய்ந்தால்...
வார்த்தைகளுக்கே மொழி மறந்துவிடும்!

மெளன பாஷையில் தவிர
மொத்த பாஷையிலும் சித்தம் சிதறும்.

கண்களும்.. உதடுகளும் தான்
உள்ளூர உள்ளதை பிரதிபளிக்கும்!

மனத்தின் கணமோ இதமோ

கனத்தில் உடல் சாரும்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
 [25.03.17 19:47]

கருத்துகள் இல்லை: