25 அக்டோபர் 2018

நான் நினைதது

நான் நினைத்தேன் நீ விரும்புவாயென..
நான் நினைத்தேன் நீ ரசிப்பாய் என
நான் நினைத்தேன் குறை எங்கேயென தேடாதிருப்பாய் என
நான் நினைத்தேன் அன்புமிகுந்திருக்குமென
நான் நினைத்தேன் ஆவலோடு பார்ப்பாயென
நான் நினைத்தேன் கர்பனைகள் விரியுமென
நான் நினைத்தேன் பழைய நினைவுகள் மீட்டப்படும் என
நான் நினைத்தேன் பார்த்து அதனோடு பேசிக்கொள்வாயென
நான் நினைத்தேன் நீ என் தவப்பயனென மார்போடு அழுத்திக்கொள்வாயென
நான் நினைக்கவில்லை இத்தனையும் நடக்காதென
எதார்த்தம் ஏற்றுக்கொள்ள சிரமயாய் தான் இருக்கும்
பரவாயில்லை அவ்வப்போது எடுக்கும் என் புகைப்படத்தை
இனிமேல்  புலனத்தில் உனக்கு அனுப்பமாட்டேன்.



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

07-10-2018

கருத்துகள் இல்லை: