27 செப்டம்பர் 2018

சீமானாய் வாழ்ந்த ஃபக்கீர்


உன்னைப் போல வாழ்தல் தான் அரிது
உன்னைப் போல வாழ்தல் தான் இனிது

கிடைக்காத வரமதை
பெற்றுக்கொண்ட பேறுனது
என்றைக்கும்  சிரித்த முகம்
எதுவாயினும் குழந்தை மனம்

ஞானோபதேசங்கள் சொல்லிக் கொண்டிருப்பதை
நீயே அறியாது வாழ்வென வாழ்ந்தாய்

பாக்கு எச்சில் வடியும் சிவந்த வாய்
தாக்கி பேசுவோரையும் தாக்காது உன் வாய்

வெற்றிலை பாக்கு கறை தான்
எவ்வளவு உயர்ந்த சட்டைக்கும்
நீ தந்த மரியாதை

உன்னை விரும்பியோர் வீட்டில்
உண்ண விரும்புவாய்
கொடுப்பதை ஏற்று
மனது நிறைய வாழ்த்தி
முறுவல் செய்குவாய்

எண்ணத்தில் இருப்பதை
எதார்த்தமாய் பேசுவாய்
திண்ணமாக போதும்
திண்ணையில் உறக்கம் கொள்வாய்

பக்கீராய் இருந்தும்
சீமானாய் வாழ்ந்தாய்
எக்காரணம் கொண்டும் ஈமானை
விற்காது வாழ்ந்தாய்

ஊர் வரும் போதினிலெல்லாம்
தேடி வரும் அன்பன் நீ
மீண்டும் ஊர் வரும் போது
மனம் தேடுமே உன் அன்பை இனி?

அதற்குள் ஏன்
துக்க செய்தி அனுப்பி
துயோனிடம் சென்றுவிட்டாய்

தூய இறைநேச நேயரே
மாய உலகம் வென்ற
தமீமுன் அன்சாரியே
வாழ்க இனி நீ நித்தியம்.

***
இரங்கலோடு இறைஞ்சும்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கடந்த 25-09-2018ல் இயற்கையெய்திய அன்பு சகோதரர் ரிபாயியா தரிக்காவில் திவான்ஷா என்று அழைக்கப்பட்ட தமீமுன் அன்சாரி அவர்களது திடீர் மறைவு குறித்து எழுதிய கவிதை.

கருத்துகள் இல்லை: