22 செப்டம்பர் 2018

பெருங்காதல் உணர்வோடு

பல்லவி:
பெருங்காதல் உணர்வோடு நபியை 
பேரருளாக தந்தானே புவியில்அவன்
பெருங்காதல் உணர்வோடு நபியை
பேரருளாக தந்தானே புவியில்

அனுபல்லவி:

தன் நூராக வைத்திருந்தான் ஒளிவாய்
பின்பு தாஹாவாய் அமைத்தானே நிறைவாய்

சரணம் :

அமாவெனும் இருளில் அறியாது கிடந்தான்
கமாலெனும் நிலையையே புரியாது இருந்தான்
சமாவெனும் வானும் விண்கோள்கள் இல்லை
நபி சர்தாரைக் கொண்டே  சமதவனை அறிந்தான்                                                                       
***
ஆதத்தின் சாரம் அவன் சமைக்கும் முன்பே
அஹ்மதின் நாதம் அவன் ஆக்கிவைத்தான்
நீதத்தின் ஓசை நிலமெல்லாம் ஒலிக்க
போதத்தின் வடிவாய் நபி யாஸினை தந்தான்.
***
நல்வழிகாட்ட பலரை நபியாக்கி வைத்தான்
நபித்துவ அசலாய் நம் மஹமூதை அமைத்தான்
ஃகலீல் கலீம் ரூஹென்று நபிமார்கள் வந்தார்
ஹபீபென்று அன்பால் அஹ்மதனில் லயித்தான்
***
மூஸா நபிக்கோ ஊசிமுனைக் காட்சி
முஹம்மதற்ளித்தான் மிஃராஜெனும் மாட்சி
எல்லோரும் அஞ்சும் மஹ்சரின் நாளில்
மகாமன் மஹ்மூதில் நீர் இருப்பீர் என்றான்
***
ரப்புல் ஆலமீன் என தன்னை விண்டவன்
ரஹமதுலில் ஆலமீன் எனநபியை விளித்தான்
இப்பெரும் சிறப்பெல்லாம் ஒருநபிக்கும் இல்லை
இனியுகம் ஜகமெதற்கும் நபிமஹ்மூதே என்றான்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

சங்கைநபி ஒலிப்பேழையில் 2016ல் வெளிவந்து மிக வரவேற்பை பெற்ற பாடல்.

கருத்துகள் இல்லை: