22 செப்டம்பர் 2018

எங்கும் நிறைந்தாளுகின்ற ரஹீமே…

பல்லவி:
எங்கும் நிறைந்தாளுகின்ற ரஹீமே…அர்ரஹீமே… என்றும்
தங்குமின்பம்  தந்தருளும் கய்யூமே ஹய்யுல் கய்யூமே…

அனுபல்லவி:
கங்குகரை காணாத கடலே..ஞானக்கடலே – அடியாரை
பொங்குகின்ற அன்பாலே அணைத்திடும் அருளே….பேரருளே…

சரணங்கள்:

இருட்டினில் சென்றேன்  ஒளியென வந்தாய்
தனிமையில் நின்றேன் துணைதனை தந்தாய்
எழுதிட முனைந்தேன் சொல்லென பிறந்தாய்
படித்திட நினைத்தேன் பொருளென விரிந்தாய்
எண்ணினேன் உன்னை என்னுள் மிளிர்ந்தாய்
ஏன்னாத போதும் எனக்கே அளந்தாய்
தென்றலின் இனிமையாய் என்னை தொடுவாய்
மன்றத்தின் தமிழாய் எனக்குள் திரள்வாய்

மலரினை பார்த்தேன் மகிழ்ந்தே சிரித்தாய்
மனதினை பார்த்தேன் அமர்ந்தே நிர்வகித்தாய்
புலரியின் வேளையில் பூபாளம் பாடினாய்
இருளினால் மாலையில் போர்வை முடினாய்
சிரித்து பூரித்தேன் இன்பமாய் நீதான்
அழுது புலம்பினேன் துன்பமும் நீதான்
பசியால் துடித்தேன் உணவானாய் நீதான்
நிசியிலும் அழைத்தேன் அணைத்ததும் நீதான்

அம்மாவென் றழைத்தேன் அன்பின் அகம் காட்டினாய்
அன்பேவென் றழைத்தேன் அழகின் சுகம் ஊட்டினாய்
ஆருளே என்ழைத்தேன் பிள்ளைமுகம் காட்டினாய்
அல்லாவென் றழைத்தேன் அனைத்தின் இதம் கூட்டினாய்
அறியப் படாமலே நீயே வாடினாய்
அண்ணல் முஹம்மதை அதற்கே தேடினாய்
மாமதி நிலவென மக்காவில் வீசினாய்
மானிட மகுடத்தை மதினாவில் சூடினாய்

- 5-6-2016

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2016-ல் வெளிவந்த சங்கை நபி இசைக்கோர்வையின் முதல் பாடல்.

கருத்துகள் இல்லை: