குடிகார தேசத்தில்
தொடரும் துயரம் இது,
தன லெட்சுமியின்
பணம் கொட்டும் கரத்திற்கு நேரே
சாக்கு பிடிக்கும்
சாணக்கிய தனத்தோடு
ஊற்றி கொடுத்தவர்களுக்கு
கோட்டை கொத்தளத்தையும்
பாட்டில் பாட்டிலாய்
ஏற்றி கொண்டோருக்கு
அறிவு மழுங்கிய தெளிவு நேரா
புலன்களின் மயக்க போதையையும்
வட்டிக்கு வாகனம் வாங்கி
ரோட்டில் குடும்பத்துடன்
கனவு சுமந்து
ஓட்டிவருவோருக்கு
தாராள மனதோடு
திடீர் சாவையும் தரும்
சித்தம் தெளியாத
வேறு வருவாய்க்கு
வக்கில்லாத எமகாதக அரசு இது
ஐயகோ! என்று விடியும்
எம் நிலத்தில் காலை!
Mohaideen Batcha, [25.09.18 11:34]
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
ஒரு ஏழை காவல்துறை பணியாளர் தன் மனைவி மற்றும் சிறு குழந்தையோடு மோட்டார் வாகனத்தில் வந்த போது எதிரே ஒரு குடிகாரன் வாகனத்தில் வந்து மோத சம்பவ இடத்திலேயே காவலர் இறக்க, குழந்தை உயிருக்கு போராட மனைவி பரிதாபமாக அழுது கொண்டிருந்த தொடர்கதை சோக நிகழ்வை முகநூலில் பார்த்ததும் நேற்று எழுதிய கவிதை.
தொடரும் துயரம் இது,
தன லெட்சுமியின்
பணம் கொட்டும் கரத்திற்கு நேரே
சாக்கு பிடிக்கும்
சாணக்கிய தனத்தோடு
ஊற்றி கொடுத்தவர்களுக்கு
கோட்டை கொத்தளத்தையும்
பாட்டில் பாட்டிலாய்
ஏற்றி கொண்டோருக்கு
அறிவு மழுங்கிய தெளிவு நேரா
புலன்களின் மயக்க போதையையும்
வட்டிக்கு வாகனம் வாங்கி
ரோட்டில் குடும்பத்துடன்
கனவு சுமந்து
ஓட்டிவருவோருக்கு
தாராள மனதோடு
திடீர் சாவையும் தரும்
சித்தம் தெளியாத
வேறு வருவாய்க்கு
வக்கில்லாத எமகாதக அரசு இது
ஐயகோ! என்று விடியும்
எம் நிலத்தில் காலை!
Mohaideen Batcha, [25.09.18 11:34]
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
ஒரு ஏழை காவல்துறை பணியாளர் தன் மனைவி மற்றும் சிறு குழந்தையோடு மோட்டார் வாகனத்தில் வந்த போது எதிரே ஒரு குடிகாரன் வாகனத்தில் வந்து மோத சம்பவ இடத்திலேயே காவலர் இறக்க, குழந்தை உயிருக்கு போராட மனைவி பரிதாபமாக அழுது கொண்டிருந்த தொடர்கதை சோக நிகழ்வை முகநூலில் பார்த்ததும் நேற்று எழுதிய கவிதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக