ஜனநாயத்தின் கடைசி நம்பிக்கையாம்
நீதித்துறையை
மயிரு தான் என்றும்
பிறகு இன்னும் கற்பனைக் கூட்டி
மண்ணாங்கட்டி என்றும்
பேரதிகாரத்தின் எச்சில்
வீராவேசமாக கூக்குரலிடும் போது
பேரதிகார எச்சிலின் முன்
சிற்றதிகாரங்கள்
"அண்ணச்சி நீங்க அப்படி சொல்லக்கூடாது"
என்று கெஞ்சி மண்டியிடும்.
பின்னும் பேரதிகாரத்தின் எச்சில்
சிற்றதிகாரம் அணிந்திருக்கும்
மரியாதைமிகு உடையை
அகோரமாய் கேவலப்படுத்தி
பொது வெளியில் காறி உமிழும்.
ஆனபோதும் சிற்றதிகாரம்
மானம் துறந்து
மீண்டும் மீண்டும் மண்டியிடும்.
அதிகாரமற்ற நீயும் நானும்
மரியாதையும் பணிவும் கொண்டு
வேண்டுவன வேண்டினாலும்
சிற்றதிகாரம் சினம் கக்கும்
சற்றேனும் மனிதாபிமானமின்றி
இட்டுக்கட்டப்பட்ட சட்டப்பிரிவுகள்
சட்டென்று பாயநேரும்.
இது எங்கள் இந்தியா
இது தான் எங்கள் தேசத்தின் முகம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
15-09-08 அன்று எச்.ராஜா விநாயக சதூர்த்தி ஊர்வல சர்ச்சைக்காக மிக அநாகரீக முறையில் காவல்துறையையும், நீதித்துறையையும் விமர்சனம் செய்த கணொளியை பார்த்த சனத்தில் எழுதிய கவிதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக