நிறம் மாற்றப்பட்டு வீசும்
பார்வையின் மொழிக்கு பின்னே
கூடவே ஒலித்துக்கொண்டிருக்கும்
உள் நெஞ்சத் தவிப்பின் மொழியை
கேட்காதது போல,
கண்டுகொள்ளாமல் நீ புறந்தள்ளலாம்
ஆனால்
உன் அகக்காதைக் கேள்
ஆர்பரித்துக் கொண்டிருக்கும்
அத்தனை தவிப்பையும் சொல்லும்.
ஆமாம்
அந்தக் கோபக்காரியை
விரட்டியடித்து விட்டு
எப்போது காதல் மொழி பேசுவாய்..?
06.05.16 15:54
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக