28 டிசம்பர் 2012

நான் எழுதிய தேர்வு




தமிழ் தானே
தாராளமாய் எழுதலாம் என்றிருந்தேன்
தமிழ் தாளும்
தன்மானம் புரட்சி செய்து விட்டது!

முயன்று முயன்று பார்த்தாலும்
முழுமையாக வராமல்
ஆங்கிலம் அந்நியம் ஆகி
அழுக வைத்து விட்டது!

கணக்கு கனிந்திருந்தாலும்
கண்ணுக்கு கன்னியாகவே
கனவுக்கும் கனியாத
காலகட்டத்தில் கணக்குத் தேர்வு!

இயன்ற அளவு எழுதி
ஏதோ மதிபெண் பெறலாம் என்றால்
இயற்பியல் நானென்ன
இலக்காரமா என்று விட்டது!

வேதியியல் தேர்வில் ஏதும்
வினைவேக மாற்றி சேர்த்திருப்பாரோ என்னவோ
கேள்வித்தாள் கூட இரும்புத் தடியாய் சாடிவிட்டது!

மகரந்த சேர்க்கைக்கே வழியில்லாமல்
பூச்சிக்கொள்ளி அடித்துவிட்டனர்
உயிரியல் பகுதியில்!

மொத்தத்தில் காலாண்டுத் தேர்வு  என்னை
கருணை கொலை செய்துவிட்டதில்
செத்தே போனேன்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



பி.கு: இது என் மாணவப் பருவ கவிதை, இந்த கவிதையை நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது 1991 - ல் எழுதியது,

(Guys! Plz do not take serious) 

கருத்துகள் இல்லை: