06 ஜனவரி 2013

அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்த ஏ.ஆர் ரஹ்மான்!



இசைத்தமிழ் கண்ட தமிழ்கத்தில் 
இசையை ரசிக்கும் தமிழர்களுக்கு பஞ்சமில்லை!

மெல்லிசையையும்
தேவராகத்தையும் ரசித்து 
சொக்கிக்கிடந்த தமிழ் மண்ணில்
அதிரடி புயலொன்று வீசிற்று!

ஆம்! 

அது பூவில் புறப்பட்ட புயல்
ரோஜாப் பூவில் புறப்பட்ட புயல்!

முதன் முதலாக புயலொன்று
ரோஜா கொடுத்தது அப்போதுதான்!

ரோஜாவின் தாக்கம்
மக்கள் இப்படியொரு புயலா
அதுவும் இசையில் இப்படி ஒருப்புயலா வென
அதிர்ந்து அதிசயித்து ஸ்தம்பிக்க வைத்ததனால்
புயலின் பெயரிலேயே 
இசையை அழைத்தனர் தமிழர்
அவ்விசைக்கு "இசைப்புயலெ"ன்றனர்!

வந்த நாள் முதல் மையம் கொண்டது தான்
இன்னும் அதன் மையல் தீரவில்லை,
பொதுவாக புயல் கடல்விட்டு கரை தாண்டும்
தாண்டினால் வலுவிழக்கும்
இசைப்புயலோ...,
மிக்க வலுவுடன்
தமிழக எல்லை மட்டுமின்றி
தாரணி எல்லைகளை வளைத்துப்போட்டது

தொடர் வெற்றி குவித்தது.
இருபது ஆண்டுகளாய் இசைப்புயல்
தருகிறது எங்களுக்கு  ஆன்மாவின் இசையை!

வருகிறது.. வருகிறது இனியும்
இன்னும் பல அற்புத பேரிசை! 

செவி திறந்து கண்களை மூடி
நெஞ்சத்தின் வழியே இசைஉலகில் 
சஞ்சரிக்க மட்டும் நாம் தயாராவோம்.

புயல் பல இசைப்பூக்கள் சொறியும்.

வாழ்த்துவோம் இன்று பிறந்த நாள் காணும் 

மனிதர்களில் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்த 
"இசைப்புயல்" ஏ.ஆர் ரஹ்மானை!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா






கருத்துகள் இல்லை: