26 டிசம்பர் 2012

அப்பாஸ் பாய் மறைவு

அப்பாஸ் பாய் என எல்லோராலும் அழைக்கப்பட்ட முதியவர் எங்களூர் வழுத்தூரில் நேற்று இயற்கை எய்தினார், அவருக்கு அகவை 83, மழைக்காக கூட இதுவரை மருத்துவனைக்கு அவர் சென்றதில்லை, இப்போது தான் அவரை குடும்பத்தினர் மிக உடல்நிலை சரி இல்லை என அழைத்து சென்றுள்ளனர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இயற்கை எய்திவிட்டார் தனது துணைவியார் இறந்து ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்ரும் சென்றுவிட்டது குறிப்பிடதக்கதும் அவர்களின் தாம்பத்திய காதலின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது.

அப்பாஸ் பாய் எங்கள் ஏரியாவின் ஜி.கே நாயுடு போல் பார்க்கப்பட்டவர் அவர் முன்பெல்லாம் அவருக்குறிய பல கருவிகளை தானே செய்து புதுமை செய்வார். அது போல் ஓவியத்திலும் கில்லாடி தானே வரைந்தத அவரின் ஓவியம் அவர் வைத்திருந்த சின்ன சைக்கிள் கடையில் மாட்டப்பட்டிருக்கும். மிக எளிமையான அப்பாஸ்பாய் பெரியாரிசத்தால் மிக ஈர்க்கப்பட்டவர். நான் சிறு பிள்ளையாய் இருக்கையில் சைக்கிளுக்கு காற்றடிக்க செல்லும் போதெல்லாம் அவரே தான் இரண்டு வீலுக்கும் அடித்துக் கொடுப்பார். காசும் வாங்க மாட்டார்.

யாருக்கும் தொந்தரவு செய்யாதவர் எந்த வாத விவாதங்களில் ஈடுபட்டது இல்லை. மனித நேயத்தையே தனது கொள்கையாக கொண்ட ஆன்மா நேற்று பயணம் புவி வாழ்வை துறந்து விட்டது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய நாமெல்லாம் அருள் கூர்ந்து பிரார்திப்போமாக!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: