15 நவம்பர் 2013

உறைந்து கிடக்கிறது !



சுற்றுச்சூழல் அனைத்தும்

சூனியம் செய்கிறது,
நற்சிந்தனைக்கு.

*


விருப்பமுடன் வளர்த்த அன்பின் கோட்டை அடியோடு சாயும்
நாவில் சறுக்கி விழும் ஒற்றைச் சொல்லால்!

*

வளர்ந்ததில் வெறுப்பே மேலிடுகிறது

குழந்தையின் குணத்தை கொலைசெய்தோம்!

*

சேகரிக்கப்பட வேண்டிய 

முத்துக்களை சிந்தியே செல்கிறது.
மழலை!

*

கூர்மையான ஆயுதங்கள் ஏதும் வேண்டாம்
வேல்விழி பார்வை ஒன்று போதும்
என்னை கொல்ல!

*

உண்மையில்

வேலையில்லாத நாட்களில் தான்
மூளை வேலை செய்கிறது.

*


இன்னும் என்ன சொல்ல!
திண்ண திண்ண திகட்டா சுவை,
வண்ணக் கண்ணம்!

*

சச்சரவுகளின் சுற்றுச்சுவர் வலிமைபெறுகிறது,
அவ்வப்போது நடக்கும் நீயா நானாவில்.

*

மறைந்து கிடக்கவில்லை எங்கோ,

உறைந்து கிடக்கிறது நம்மில்.
மகிழ்ச்சி!

*

உடையும் என்று தெரிந்தே

நொறுக்கப்படுகிறது.
இதயங்கள்!

*

வான்மதி பார்த்தால் வரும் நிம்மதி - நம்
திருமதிகளை பார்த்தால் நிர்கதியாகிவிடுகிறது.

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
கவிதையின் வரிகள் மனதை கவர்ந்துள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-