13 மார்ச் 2012

பிரபஞ்ச மீலாது விழா!



வசந்தமே.. வசந்தமே..  வருக.. வருக..!
பிரபஞ்ச வெளிச்சமே வருக... வருக..!

ஆண்டவன் ஒளியின் சொலிப்பே வருக..!
அஹமதெனும் மாணிக்க‌ விளக்கே வருக!

பூரணத்தை வெளியாக்கிய பூரிப்பே வருக..!
பூலோகம் கொண்டாடும் பெருமாரே வருக..!

அன்னை ஆமீனாவின் சிரிப்பே வருக..!
தந்தை அப்துல்லாஹ்வின் களிப்பே வருக..!

அப்துல் முத்தலீபின் லயிப்பே வருக..!
அரபிய மக்களின் சிறப்பே வருக..!

ஆம்..!

இப்றாகிஹிம் நபியின் இறைஞ்சுதல்
இறைவன் புறத்தில் ஏற்கப்பட்டது!

பூலோக இதயமாக
புனிதத்தின் உதயம் நிகழ்ந்தது!

அருந்தவம் இயற்றிய ஆமீனா
பெருந்தவத்தை பெற்றெடுத்தார்!

மணிவயிற்றில் பேறாக சுமந்தவர்
அணியணியாய் வானவர் வாழ்த்த
நனிசிறந்த புனிதப் பூவை
பூவிமீது இறக்கி வைத்தார்!

நிகழ்ந்தது ஏதோ ஓர் பிரசவம் அல்ல..!
நிகரில்லா இறைத்தூதரின் - பூலோக
அருட்பிரவேசத்திற்கு நிகழ்த்தப்பட்ட
மாபெரும் மீலாது விழா!




-ஜே.எம்.பாட்ஷா

2006 ஆம் ஆண்டு எழுதி இருப்பேன்

கருத்துகள் இல்லை: