12 மார்ச் 2012

திருத்தூதின் துதி!


துதி பாடுவேன்.. துதிபாடுவேன்... திருத்தூதே
எந்தன் மதி தன்னில் உறைந்திட்ட அளவுக்கு..!
மதிதன்னில் முடியாத நிலையினிலே
மாய்ந்திடுவேன் மதினாவின் மடியினிலே..!

குறுமதியால் நபியை உணர்ந்திடவே
சிறுமதியார் நினைத்தால் முடிந்திடுமோ..!
மதியாகவும் எதன் சுதியாகவும்
ஆகிநிற்பதை உணர்ந்தேற்றால்
அமுதாக மாறி முதுசுகம் அளிப்பீரே..(துதி..)

இதிகாசங்கள் கூறிடும் பெருந்தலைகள்
சத்தியமாய் சற்றேனும் நிகரில்லை
பெருநாச நிலையினிலே பெயர்கூறா நிலையாகி
திருவாசமாய் மணங்கமழும்
உமக்கிகத்தில் ஒருவருமே நிகரில்லை..(துதி..)

கதியாரும் இல்லை உமையன்றி
பதியே எந்தன் நற்கதியாகுமே
விதிசெய்வீர் நான் அழிந்தே 
உண்ணத அழங்கார நபித்துவ
அகமிய சங்கமத்தில் ஜொலி ஜொலிக்க(துதி..)

சகவாசம் ஒன்றே போதுமம்மா - இரு
ஜகவாச இன்பத்தில் இதற்கோர் ஒப்பில்லை
நபிநேசம் ஒன்றே எந்தன் இலக்கு
அத்திருநேசம் கிடைத்திட்டால்
என்றைக்கும் எனதுள்ளம் மகிழ்ச்சி கிழக்கு(துதி..)

சதி செய்வோர் யாவருமே ஒன்றினைந்து
சங்கமமைத்து செய்திடினும் இவர்களுக்கும்
நைல் நதி நடுவே விதி முடிந்த அந்நிலையே
ஆதியாய உமையரிந்து நாதியே என்போருக்கு
ஜோதியாய் நீர்வந்தே நிறையன்பு சொறிவீரே! (துதி..)

-ஜே.எம்.பாட்ஷா

இது வேறு வகையில் 1998 ஆம் ஆண்டு எழுதப்பெற்றது இதை சற்றே வடிவமைத்து பதித்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: