அப்பப்பா... மனிதா..!
நீ உலகியல் உயிரிகளின்
சக்திகளில் மிகப்பெரியவன்
உன்னால் முடியாது தான் எது..!
ஐம்பூதங்களையும் ஆட்டிப்படைக்கும்
கூர்மையான பார்வை பெற்ற
ஆற்றல் கொண்டவன் நீ..!
ஏதும் பெரிதில்லை..!
ஏதும் வலிதில்லை..!
ஏதும் கடிதில்லை..!
உன் வைரக்கியத்திற்கு முன்
பூமியும்.. கடலும்..
வானமும்.. அதன் வகைகளும் கூட
வரையில்லை.. தடையில்லை..!
உன் அறிவு
தூரங்களை கடந்து ஊடுருவும்!
உன் கருவி
வான்கிழித்து வேகத்தில் பாயும்!
பிரமிப்பிற்கு அப்பாற்பட்ட
பிரமிப்பாய்..
பிரமாண்டமாய்.. விளைகிறது
மனித அறிவிலிருந்து
வெளியாகும் சக்திளெல்லாம்!
அறிவு
தீயினும் மேலாக எங்கும் விரவும்!
காற்றினும் மேலாக. எங்கும் புகும்!
இவன் இதுவரை சாதித்தததெல்லாம்
இதுதான் இவன் சக்தி என
முற்றிட முடியாது..!
இப்போதுவரையிலான
இவனின் செயல்பாடுகளெல்லாம்
இவனின் செயல்பாடுகளெல்லாம்
இவனின் பகுதி வெளிப்பாடுகளே..!
இவனின் பூரணம்….
இவனாலேயே அளவிட முடியாதது!
ஏனெனில் இவன் இறைவனின் பிரதிநிதி!
ஜா. மு. பாட்ஷா
இந்த கவிதை திரு.அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் படித்து விட்டு அதன் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாத அன்றைய நாட்களில் (2006) துயாய் ஆர்.டி.ஏ. பஸ்ஸின் ஒரு பகல் பயணத்தில் எழுதியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக