23 ஜூன் 2011

உண்மையாய் உயிர் வாழுங்கள்..!





தனக்குத் தானே பேசினால்..!
தனிமையைத் தேடி மூழ்கினால்..!
சித்தம் தெளிவாகி - புது
ரத்தம் உடல் பாயும்..!

நம்மில் நம்மை
பார்த்து... படித்துக்கொண்டால்..!
நமக்குள் நாமே பேசிக்கொண்டால்..!
உடம்பும் உயிரும்..ஆஹா
காற்றாய் இலேசாகும்!

குழப்ப சூழ்நிலையிலோ
முடிவெடுக்கும் தருணங்களிலோ
தனிமையை கொஞ்சம் விரும்பி
அமைதியின் ஆழம் சென்று
நம்மில் நம்மை அழைப்போம்..
நண்பனைப்போல் கொஞ்சம் பேசுவோம்..
கொஞ்சம் கொஞ்சியும் போசுவோம்..

வாய் விட்டுப் பேசினால் தானே
வாய்க்கு வந்தது போல் பேசும்
சமுதாயம்..
மொனமாய் நாமே
நம்மை தழுவலாம்..!

யாரோ ..
பைத்தியக்காரத்தனமாக கூறியிருக்கிறார்கள்
தனக்குத்தானே பேசினால்
பைத்தியக்காரன் என்று!

உண்மையில் தனக்குத்தானே
பேசாதவன் யாருமில்லை,
வேண்டுமென்றால்- அதில்
சதவிகித வேறுபாடு இருக்கலாம்.

அவனோடுபேசுவது அவனனுக்கேக்கூட
தெரியாமல் இருக்கலாம் ஆனாலும்
அவனவன் தனக்குத்தானே
பேசிக்கொண்டு தான் இருக்கிறான்!
மெளனமாய் இருக்கும்
ஒவ்வொருவரும் மனதால்
ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!






மனது
ஆயிரம் நாவுகளால்
ஆயிரம் விசயங்கள்
அணுகனமும்
அசையிட்டுக் கொண்டேயுள்ளது.

உங்களோடு பேசி
உங்களை நீங்களே
நிர்வகித்து..,
நிர்மானித்துக்கொள்ளுங்கள்!
உங்களோடு நட்புக்கொள்ளுங்கள்
உள்ளிருக்கும் நண்பனை
உதறித்தள்ளவேண்டாம்!

அவ்வப்போது அணைத்து
நிம்மதி ஊட்டுங்கள்.- நீங்கள்
உள்மனதை கண்டுகொண்டாலோ -உள்ளிருக்கும்
தாகமெல்லாம் தீர்ந்துவிடும் - ஜீவ
ஏக்கமெல்லாம் பறந்துவிடும் – மனமும் மெய்யும்
ஆக்கமுடன் ஊக்கம் பெறும்.

ததும்பும் மனம் அமைதியுற
தாலாட்டாய் வெற்றி வர
ஆன்மாவொடு ஆதரவாகி
ஆழ்ந்து பேசி
மேன்மை அடையுங்கள்!

நீங்கள்
உங்களோடு பேசும்போது
பிரபஞ்சத்தோடேயே
செயற்கை உபகரணம் இன்றி
பேசுகிறீர்கள்!

இன்றைய நவீன
இயந்திர உலகம்
செய்த பெரும் சதி
உங்களை உங்களிலிருந்து
பிரித்தது தான்.

அதனால் தான்
நிம்மதி இல்லை,
நிஜம் இல்லை,
இன்னும் பல தொல்லை..

ஆகவே..,
உங்களுக்காய் நேரம் ஒதுக்கி
உங்களோடு உறவாடி
உயிர் நாடியோடு சங்கமியுங்கள்!
அந்த சந்தர்பத்திலாவது
உண்மையாய் உயிர் வாழுங்கள்..!



  
  



எழுதியது துபையில் ஒரு மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரம் இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் தங்கி இருக்கும் சூழல் ஏற்பட்ட போது… என் சிந்தனை பறவை என்னுள் பறந்த போது கண்டுவந்த கரை.. பிடித்து வந்த இரை. காலம்.. 2006 அல்லது 2007 இருக்கலாம்

அன்புடன்,
ஜே.எம்.பாட்ஷா

2 கருத்துகள்:

lalpetpost.blogspot.com சொன்னது…

அற்புதமான கவிதை.. ஆழ்மனதின் ஆழத்தை அளந்து விட்டது.வாழ்த்துக்கள்!
அன்புடன்,
லால்பேடை அப்துல் ரஹ்மான்,
அபுதாபி.

kumaresan சொன்னது…

தன்னோடு உரையாடுதல் சக மனிதரோடு உறவாடுதலுக்கான முதல் படி.