11 ஜூன் 2012

சாரல் நேரம்!




ஒவ்வொரு நாளும்
உன் குரல் கேட்டுத்தான்
என் மனக்குயில் பாடத் துவங்கும்

*****
புலரும் பொழுதுகளில்
உன் குளிர் மனம்புகுந்தால் தான்
என் மனத் தோட்டம் துளிர்க்கும்

*****
அந்தி நேரம் அழகு நேரம்
சந்திக்க சாரல் நேரும்
சிந்திக்க வேறில்லாது
முந்திக்கொண்டு முகம் தேடும்!

*****
உன் முகப்பூ பூக்காதிருந்தால்
என் அகப்பூ கருகிவிடும்!

*****
நின் பற்களின் சூரியன் தெறிக்க
என் எண்ணச்சந்திரன்களில்
மிண்ணும் பெளர்ணமிகள்!

*****
உன்
செவ்விதழ் பட்டுவர
செந்தமிழெல்லாம் அமுதமாகி
செவிகளில் செந்தேன் மழை பொழியும்!

*****
கடிகாரத்தின் மீது கடுங்கோபம்,
நாங்கள் பேசும் போது மட்டும்
பொய்யாய் நேரங்காட்டுகிறது.

*****
சன நேர ஓவியக் கூடங்களாய்
ஆச்சரியத்தில் ஆழ்த்தி மறைகிறது
உன் உதட்டோரப்புன்னகை!

*****
உனக்கான
காத்திருப்பிலெல்லாம்
பூத்திருக்கும் பூவின் நிலையில் நான்!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

ABUSAAEMA சொன்னது…

கவிதைச் சாரலில் எமை நனைத்தமைக்கு நன்றிகள்.சந்திக்கும் நேரத்து சாரலின் தூறல் துளிகள் வளர்ந்து காதல் மழை பொழியட்டும்.வாழ்த்துக்கள்.