15 நவம்பர் 2014

கவிதை என்றால்....???



இன்னும் எப்படி என்று
தெரியவில்லை கவிதை எழுத!

ஆனாலும்,
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதை.

புதுக்கவிதை என
கதைவிடுகின்றனர் சிலர்,
எழுதிய குறுங்கதைக் கூட
கவிதை எனப்படுகிறது,

நிகழ்வுகளை மடக்கி.. மடக்கி..
சுவாரஸ்யமாய் விதைக்கின்றனர்,
அதுவும் அழைக்கப்படுகின்றது
கவிதை யென,

புரியாத சொற்பிரயோகம்
அறியாத அடுக்கு மொழிகள்
தெரியாத கற்பனைகள்
இவைகளின் கூடல் கூட கவிதையாம்,

எதார்த்தம் குறையாமல் - நிறை
பதார்த்தம் நிரப்பி
நடைமுறை வழக்கம் விளங்கி
விளக்கிடுவர் நம்மவர்
அது கூட கவிதை!

உணர்வுகளை எழுதும் போது
நெல்லினூடே உமிகளை
ஊதித் தள்ளுவது போல‌ச்
சொல்லினூடே உமிகளை நீக்கிச்
சுவைகல்ந்து படைக்கின்றனர் கவிதை.

சிலர் எதுகை மோனையுடன்
எதிலும் பொருள் சேர்த்து
எளிதில் புரியும்படி
இயற்றுவதும் கூட கவிதை
ஆனாலும் அதை புத்துலகில்
கவிதை என மதிக்கிறார்களில்லை,

எது எப்படியோ....ஆனாலும்

இன்னும் எப்படி என்று
தெரியவில்லை கவிதை எழுத!

ஆனாலும்,
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதை.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: