உருண்டோடுகிறது நாட்கள்
மாறிக்கொண்டே இருக்கிறது காட்சிகள்!
திரைக்குப்பின்னால்
இருக்கும் இரகசியமாக
ஒவ்வொரு கணமும்
ஏதுமறியா எதிர்பார்ப்பில்..!
விடியலுக்கும்...
மயங்குதலுக்குமிடையில்,
எத்தனை எத்தனையோ
எண்ண வண்ணங்களின் மீட்சிகள்..!
சிந்தனைச்சிறையில்
அடைபட்டிருக்கும் மனிதர்கள்
சிந்தாந்த சிறையில்
பூட்டப்பட்டிருக்கும் மாந்தர்கள்...!
மன ஓசைகளின்
ஆசைப்பட்டியலையே
விரிப்பாய் விரித்தபடியால்
வாழ்க்கைப்பாதையே
முள்படுக்கையாக..
தவித்துக்கொண்டிருக்கும்
பெருங்கோடி சனங்கள்..!
நீயா.. நானா வெனவே
எதிரெதிரே விவாதமே போதமாக
வாழ்வினில் அழியும்
ஆன்மவிரோத ஜென்மங்களின்
போலி எதார்த்தங்கள்..!
அரசியல் அழிச்சாட்டியங்கள்
மீண்டும்... மீண்டும்.. சுரண்டப்படும்
கஞ்சிக்கே வழியறியா
அன்றாடங்காய்ச்சிகள்..!
வியாபார முதளைகளின்
விசக்கோட்பாடுகள்,
அழியும் கிராமங்கள்
மறையும் விவசாயம்
சாகும் இயற்கை
வெந்து சாம்பலான அறப்பண்புகள்
எங்கும் பொய்மைகள்
அரிதாரப்பூச்சுகளின்
அலங்காரங்கள்,
வெற்று கேளிக்கைகள்
வீண் விளக்கங்கள்.....................................
...................................................................
.....................................................................
இப்படியான உலகில்,
ஒன்று முடிய இன்னொன்றாய்
வரிசை கட்டி வருகிறது
மனித ஜென்மங்கள்,
வாழ்வதாக சொல்லிச் சாக!
உருண்டோடுகிறது நாட்கள்
மாறிக்கொண்டே இருக்கிறது காட்சிகள்
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2 கருத்துகள்:
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
கருத்துரையிடுக