14 நவம்பர் 2014

நான் மட்டுமே!



வீருகொண்ட வேங்கையாய்..!
சினங்கொண்ட சிங்கமாய்
வெற்றி வெறிபிடித்து அழைகின்றேன்..,

என்னை வீழ்த்திட எவனும் பிறக்கவில்லை

என்னை நான் காட்டிக்கொள்ளவே
மண்ணில் வந்தேன்

இமயம் கூட உயரம் என
இனி இருக்கக் கூடாது
அதற்கு நானே உதாரணமாக வேண்டும்,

காலடியில் உலகமதை
மிதிக்கும் சகல வல்லமை
பெற்றவன் நான் மட்டுமே!

வெற்றி வெற்றி என்ற
ரீங்காரத்தை தவிர
எந்த ஒலியையும்
என் செவி
இனி ஏற்காது!


2001- பிப்ரவரியில் எழுதியது திருச்சியில் டி.எஸ்.எம். சாஃப்டி-ல் வேலைசெய்த போது.. இப்படியும் ஒரு அக்னிப்பிரவாகம் அவ்வப்போது என்னில் வெடிக்கும்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்