25 ஜூன் 2022

நாலுபேர் தான்

எப்படித்தான் 
எக்காலத்திலும்
பெரும்பாலான மக்கள்

மடையர்களையும்
பொய்யர்களையும்
தேடித் தேடி பின்பற்றுகிறார்கள்
என்பது இப்போது வரை பெரும் புதிர்!

அறியாமை என்பது விதியல்லவே
அறிவுடைமை யாருக்கும் விதிவிலக்கல்லவே
அறியாமையைக்கூட அறிவுடைமை 
என வாழ்ந்து சாவது எப்பேர்பட்ட துயரம்.


ஒலி வாங்கிக்கு முன்னால்
வழிய வந்து பேசுவோன் எல்லாம்
உண்மையைத் தான் பேசுவானென
உளமாற நம்பிக்கை வைக்கின்றனர்.

சத்தியம் பேசுவோன் 
ஒரு கட்டத்தில்
சக்தி இழந்து 
சோர்வாகிப் போகிறான்

சாகும் வரை 
நாலுபேர் தான், அவனுக்கு.

- ஜா.மு
25-06-22 12:40

கருத்துகள் இல்லை: