27 ஜூன் 2022

இரு கரை நீ!

வறண்ட பெருநிலம் யான்
உன்னால் சமவெளியாகினேன்
பூக்காடு கண்டேன்.
*
வெளிச்சம் மிகைத்தது
நீ வர
இருண்ட கோளத்தில்.
*
புல்வெளி பனித்துளி என்னை
ஒளி பாய்ச்சி மின்னிடச்செய்தாய்
சூரிய கிரணங்களைப் போல.
*
குயில்களற்ற
மரமாய் நின்றிருப்பேன்
நான் மட்டுமாய் இருந்திருந்தால்
பூத்துக் கனிகள்
சுமந்த கிளைகளில்
கிளிகளும் குயில்களும்
மகிழ்ந்தாடும்
இசைக்கு பஞ்சமில்லாத
சரணாலம் தந்தது
உன் சங்கமம்.
*
ஒடும் ஆறாய் நானிருக்க
பேறாய் வந்து
இரு கரைகளானாய்
தேடும் நேரத்திலெல்லாம்
என்னோடு கலந்திடும்
தீர்த்தக் கடலானாய்.
*
புலர்ந்த பொழுதில்
இரை தேடும் பறவையாய்
உன் உலகத்தில்
பிரவேசித்த போழ்திலெல்லாம்
நீயே வள்ளலாகி நின்றாய்.
*
-ஜா.மு.
2017
 
 


கருத்துகள் இல்லை: