20 ஜூன் 2022

மை வண்ணன் - இராம காவியம் - காப்பியக்கோ ஜின்னா சரிபுத்தீன்

துபாயில் நேற்றைக்கு முந்தியநாள் (18-06-2022) முப்பெரும் விழா அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் கானல் / Kaanal அமைப்பின் சார்பாக சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்வு 1: அன்புச் சகோதரர் பாலாஜி பாஸ்கரன் Balaji Baskaran அவர்கள் Galaxy Book sellers & Publishers https://galaxybs.com/ என்ற புதிய நூல் பதிப்பகம் மற்றும் விற்பனை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அறிவும் சிந்தனையும் உங்கள் வாசல் தேடி என்ற முகவுரையோடு தொடங்கப்பட்டிருக்கும் அவரின் இப்புதிய நிறுவனம் சிறந்து தொழில் ரீதியாகவும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள் .
நிகழ்வு 2: Galaxy Books நிறுவனம் தொடங்கி அதன் முதல் நூலாக இன்றைய சூழலில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் காப்பியக்கோ ஜின்னா சரிபுத்தீன் Ahamed Jinnahsherifudeen அவர்கள் எழுதிய "மை வண்ணன்" இராமகாவியம் என்ற காவிய நூலை வெளியிட்டு பெருமை சேர்த்துக்கொண்டது.
நிகழ்வு 3: கடந்த 2019ம் ஆண்டு ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வெளியாகிய Jazeela Banu எழுதிய வேற்று திசை நூல் விமர்சனக்கூட்டமும் சிறப்புடன் நிகழ்தேறியது.
Galaxy Books புதிய நிறுவனத்தை தொடங்கி வைக்க Ahamed Jinnahsherifudeen Siddiq Syed Meeran A Md Mohideen அபுதாபி Ramesh Ramakrishnan Hameed Yasin உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
மைவண்ணன் இராம காவியம் நூலை வெளியிட்ட நிகழ்வில் எங்கள் அண்ணாச்சி Asif Meeran நூலில் சில பகுதிகளை வாசித்து நூல் நயம் வியந்தார், Suresh Babu Bilal Aliyar மற்றும் பலரும் வாழ்த்துரையில் இணைந்தனர்.
நிகழ்வை அறிந்த, காப்பியக்கோவின் முந்தைய காவியமான "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" நூல் புரவலர் பெருந்தகை வெள்ளம்ஜி Jamal Mohamed Mohamed Iqbal அவர்களின் ஆவல் மிகுந்த எதிர்பாராத வருகை அனைவருக்கும் மகிழ்வளித்தது. காப்பியக்கோவும் புரவலரை அன்போடு வரவேற்று பெருமிதம் செய்து மகிழ்ந்தார்.
புத்தக விமர்சனக்கூட்டத்தில் போதுவாக புத்தகம் எழுதியவரை ஏற்றி போற்றிப் பார்த்திருப்பீர்கள், ஆனால் வேரெந்த இலக்கிய அமைப்பிலும் நடக்காத தயவு தாட்சண்யமில்லாத கிடா வெட்டு எங்கள் குழுமத்தில் நடப்பது இயல்பு. அதில் கொஞ்சமும் ஈவிரக்கம் கழிவிரக்கம் என ஏதுமிருக்காது, இனி புத்தகம் எழுதுவியா ரேஞ்சுக்கு அறுத்து தொங்கவிடுவது இங்கே அன்றாடம் நடக்கும் நிகழ்வு.
அதை விருந்தினர்களாக வருவோர் கண்டு அரண்டு விடுவதும் உண்டு வியப்பதும் உண்டு. அது தான் நேற்றைய வேற்றுதிசை நூல் விமர்சத்திலும் நடந்தது.
விமர்சனக்கூட்டத்தில் பலர் எப்போதும் போல குறைகளாய் நினைப்பதை கழுவி ஊற்றி எதிர்கட்சி அரசியல் மேடை ரேஞ்சுக்கு பேசித்தீர்த்தாலும் அந்த தோழமை எள்ளல்களை ஏற்ற நூலாசிரியர் Jazeela Banu வின் ஏற்புரை பாராட்டுக்குரிய விதத்தில் சிறப்பாய் அமைந்தது.
சிரித்து மனதை இலேசாக்கிக்கொள்ள பல ஊர்களில் ஹியூமர் கிளப் என்று தனி அமைப்பை நிறுவி, தங்கள் நிகழ்வுகளில் பெரிய பணமுடிப்பைக் கொடுத்து பிரபல நகைச்சுவைப் பேச்சாளர்களை அழைப்பது நிகழ்கிறது ஆனால் அது இங்கே எங்களாலேயே நிகழ்வது தான் குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நேற்றைய நிகழ்விலும் பேசிய அனைவரின் பேச்சிலும் நகைச்சுவைக்கும் அதனால் தங்களை மறந்த கூட்டத்தின் சிரிப்பலைக்கும் குறைவே இல்லை.
நிகழ்வை Nive Anandhan தொகுத்து சிறப்பான சம்பவமாக்கினார். ஆவணமாக்கிய அண்ணன் Subhan Peer Mohamed மற்றும் பின்புலத்தில் உழைத்த எல்லா குழும அன்பு நெஞ்சங்களுக்கும் பேரன்பு வாழ்த்துகள்.
மகிழ்ச்சி.
ஜா.மு.
20-06-2022





கருத்துகள் இல்லை: