10 ஜூன் 2022

விக்ரம் வசனம்




ஒரு தீவிரவாத கும்பலின் ரகசிய பாடல் ஒரு காலத்தில் நாட்டின் தேசிய கீதமாகக்கூட வரலாம்.. அவரவர்கள் கோணத்தில் அவரவர்களின் நியாயம் என்று ஒரு வசனம் பேசுகிறார் விக்ரம் படத்தில் கமல். ( மறைமுகமாக RSSஐ சொல்லி இருக்கலாம்)
இது போன்ற தீப்பொறி வசனங்கள் வைப்பதில் கமல் வல்லவர்.
முன்பு நம்மவர் படத்தில் ஆசிரியராக பாடம் எடுக்கும் முதல் காட்சியில்..
"வியாபாரத்திற்காக வந்தவர்கள் நாட்டை பிடித்து அடிமையாக்கி இதன் வளங்களையெல்லாம் சுரண்டி அவரது நாட்டிற்கு சதா கொண்டு சென்றவர்களை |||ஆங்கிலேயர் வருகை||| என்றும், நாட்டை வென்று ஆட்சியை பெற்று இங்கேயே இருந்து இங்கேயே ஆண்டு இந்த நாட்டையே வளப்படுத்தி இங்கேயே வாழையடி வாழையாக பிறந்து இருந்து இறந்தவர்களை |||மொகலாயர்கள் படையெடுப்பு|||" என்றும் வரலாறு இப்படித்தான் பாரபட்சமாக பதிந்து வைத்திருக்கிறது என்று வசனம் வைத்திருந்தேன் அதை சென்ஸாரில் அனுமதிக்க மறுத்து நீக்கிவிட்டார்கள் என்று 2010ல் ஒரு பேட்டியில் கமல் சொல்லியிருந்தார்.
- ஜா.மு

கருத்துகள் இல்லை: