01 ஜூன் 2016

இனிப்பின் கூடை

ஏன் இனிப்பின் கூடையை
யாருக்கோ சுமந்து செல்கிறாய்?
நீ கடக்கும் வழியினில்
நான் தான் யாசகனாய்!
உயர்த்திய தட்டுடோடு
ஏக்கத்தின் குரலை எழுப்பியவனாய்
நான் தான்!
நீ தான் கண்டும் காணததுமாய்
அந்த இனிப்பின் கூடையை
யாருக்கோ சுமந்து செல்கிறாய்..
ஆனாலும் உன் செவியில்
என் குரல் கேட்காமல் இல்லை
இருப்பினும் கேட்காதது போல கடக்கிறாய்
உன் பார்வை என் மீது படாமலும் இல்லை
ஆனாலும் உன் கவனம் என்மீது படவே இல்லை
உன் உள்ளுணர்வு அறியும்
உன் ஆழ்மனம் கேட்கும்
எதிர்பட்ட யாசகனை
ஏன் மறுதளித்தாய் என..?
யோசிக்கின்ற சனத்தில்
நீ சுமந்து சென்ற
இனிப்பின் கூடையை
அந்த யாரோ.. அப்போது..
பெற்றுக்கொண்டும்
பொருட்படுத்தியிருக்கவே இல்லை.
-முஹையத்தீன் பாட்ஷா

9.26am

கருத்துகள் இல்லை: