20 ஜூன் 2016

கலவரக்காரர்களின் மதம் - முகநூல் - 20-6-2014

கலவரக்காரர்களின் மதம்:
கலவரக்காரர்களுக்கு என்றுமே மதமும் இருந்ததில்லை, மனிதமும் இருந்ததில்லை... அவர்களின் நினைவு வேண்டுமானால் தாங்கள் தாங்களின் மதத்திற்காக போராடுவதாக என இருந்திருக்கலாமேயொழிய எதார்த்தத்தில் அவர்களின் மதத்திற்கு அவரவர்கள் உண்மையாளர்களாய் இருந்தால், அல்லது எல்லா தத்துவத்திற்கும், மதபோதனைகளுக்கும் அப்பாற்பட்டு ஒரு கடைநிலையில் மனிதப்பிறவியாக ஒரு ஓரத்தில் இவர்கள் உணர்ந்திருந்தால் இந்த இரத்த வெறியோடு மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
கலவரம் என்றாலே கலவரக்காரர்களில் மனிதம் என்பதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் உலகில் இருக்கும் எல்லா மிருகத்தை விடவும் மோசமான கேவலமான அசுர வெறியின் உச்சத்தில் ஏறி ஆடுவர்களாகிவிடுவர், அப்போது அவர்களுக்கு சக மனிதனின் அருமை பெருமைகள், ஈவு இரக்கங்கள் எல்லாம் அவர்களின் கண்ணுக்கோ, நெஞ்சுக்கோ தெரியாது..
இது தான் ஈராக்கிலும், இலங்கையிலும் இப்போது நடக்கிறது, இது நாள் வரை இது தான் சிறியாவிலும், எகிப்திலும் நடந்தது, இது தான் அன்று குஜராத்திலும் நடந்தது.. இது தான் எங்கு கலவரம் நடந்தாலும் நடப்பது. அங்கு மனிதர்கள் இருக்க மாட்டார்கள் அதனால் மனிதர்களை அந்த மனிதம் இல்லாத மாபேய்கள் சூறையாடுவது அவர்களுக்கு தவறாயிறாது.

ஒருவரைப்பற்றி நெருங்காது.. பழகாது.. ஆராயாது நிறைய பேர் தன் மனதின் தோராய மதிப்பீட்டிலேயே சான்றிதழ் வழங்கி விடுகிறார்கள்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: