21 ஜூன் 2016

முகநூல் நிலைத்தகவல் ஜூன் 21

மனிதர்கள் எல்லோரையும் தெளிவுடைய அறிவாளிகளாக எத்தனை தெளிவான உயர் அறிவாளிகள் முயற்சித்தாலும் முடியாது அதனாலேயே தொன்றுதொட்டு அறிவாளிகள், பொதுமனிதர்கள் குறித்து தெளிவான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

எல்லா உண்மைகளையும் எல்லோரும் உண்மையாக உண்மையென நம்பமாட்டார்கள்... பொய்யை நம்புவதற்கென்றே பாரம்பரியமாக பெருங்கூட்டம் பாரினில் இருந்து கொண்டே தான் இருக்கும்.

பிஞ்சு விரல்கள் கிறுக்கிடும் கிறுக்கல்களில் சறுக்கி விழுந்தது என் மனம்.

குழந்தைத் தனம் மாறும் போதே மனிதத் தன்மையும் மாறுகிறது..‍!

வினாடிகள் தோறும் வினோத மாற்றம் காணுகிறது அண்டம்.
ஒரே மாதிரி என்பது என்றும் நிலைக்காதது.
ஒரே மாதிரிகளில் கூட எண்ணற்ற வேறுபாடு என்பது தான் பேருண்மை.
வேறுபாடுகளையும் சூழ்நிலை மாற்றங்களையும் எல்லா உயிர்களும் எதிர்கொண்டே ஆகவேண்டும் இன்றைய பாஜக அரசை இந்தியர்கள் ஏற்றிருப்பதைப்போல!
காலங்கள் தந்த எத்தனையோ மாற்றங்களை தாங்கியப்பின்னும் எஞ்சி நிற்பது தான் இன்றைய பூமி!
வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் தனிப்பெருமை!
ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே சட்டம்! ஒரே மோ....டி என்பதெல்லாம் செல்லாதவைகள் என காலம் தீர்ப்பு வழங்கும்!
அதுவரை ஆர் எஸ் எஸ் ஆனதெல்லாம் செய்யட்டும்.
நாளைக்காக இதயம் உள்ளவர்களும் நடுநிலையாளர்களும் அமைதியோடு புதிய வழி வகுக்கட்டும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: