16 பிப்ரவரி 2014

திமுக-வின் 10வது மாநில மாநாடு


*
கூட்டணி தலைவர்களுக்கு கட்டவுட் வைத்ததிலிருந்து கூட்டம் நடந்து முடிந்தது வரை நிறைய விசயங்கள் தமிழகத்தின் பிற பிரதான கட்சிகளிடம் காண முடியாதவை.

*
தலைவர்கள் பேசும் போது ஏன் கலைஞர் பேசும் போது கூட தொண்டர்கள் ஆரவாரம் செய்ய அதை யாரும் கோபத்தோடோ... அல்லது சப்தம் கொடுத்தோ அடக்க முயலவில்லை. இந்த மேடையில் விஜயகாந்தை நினைத்துப்பார்க்க மிகுந்த வேடிக்கையாக இருந்தது. ஆயிரம் முறை நாக்கை கடித்து கையை காட்டி அதட்டி கத்தியிருப்பார்.

*
கலைஞர் பேசியபோது ஏதோ சகமனிதர் போல கலைஞரின் தோள்  மேல் கைப்போடாத குறையாக தொண்டர்கள் தள்ளிக்கொண்டு நெருங்கி நிற்க அதை கலைஞரோ, கழகமோ அல்லது மாநாட்டு நிர்வாகமோ கூட அவர்களை ஏதும் சொல்லவில்லை மாறாக அவர்கள் தங்கள் தலைவரின் பேச்சை அருகில் இருந்து மெய் மறந்து கேட்டு ரசித்தனர்.


*
இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். சற்று நேரம் தான் இன்றும் நேற்றும் காண கிடைத்தது. நேற்று பார்த்தவகையில் ஆ.ராசாவின் பேச்சு அருமை இன்று கி.வீரமணியின் பேச்சு நன்றாக இருந்தது. மற்ற தலைவர்களின் குறிப்பாக தலைவர் பேரா.காதர் மொகிதீன் , தொல். திருமாவளவன் மற்றும் பேரா.ஜவாஹிருல்லாஹ் இவர்களின் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லை.


*
உண்மையில் ஜனசமுத்தரம் என்று சொல்லும் அளவுக்கு அணி திரண்டிருந்த மக்கள் வெள்ளம் சிறப்பான மாநாட்டு ஏற்பாடு இவைகள் முக்கிய அம்சம்.

*
மாநாட்டு தீர்மானமாக இடம் பெற்ற 15 கோரிக்கைகளும் சூப்பர், அதிலும் குறிப்பாக திமுக என்றும் விட்டுக்கொடுக்காமல் வலியுறுத்தும் சேது சமுத்திர திட்டம், மாணவர்களுக்கு கடன் ரத்து செய்தல், தூக்கு தண்டனை ரத்து மற்றும் நெல் கொள்முதல் விலை போன்றவை அற்புதமானவை.

*
மாநாட்டு நிறைவு பேருரையில் கலைஞர் கே. என். நேருவையே பாதி உரை புகழ்ந்து தள்ளிவிட்டார் அதை சற்று குறைத்திருக்கலாம். இன்னும் அவர் பேச்சில்  நாம் எதிர்பார்த்தது அதிகம்.

*
மொத்தத்தில் உடன்பிறப்புக்களுக்கும் கழகத்திற்கும் புத்துணர்வு கொடுத்த மாநாடு என்றால் இது மிகையில்லை.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

SNR.தேவதாஸ் சொன்னது…

இதுவே கலைஞர் முதல்வராக இருந்தபோது நடந்த மாநாடுகளையும் செம்மொழி மாநாடையும் வசதியாக மறந்துவிட்டீர்களா?
மேடையில் இத்துணை கூட்டம் இருந்ததா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்