08 மே 2018

காற்றானவன்

நடுவில் நிற்கிறது
வெற்றுத் தராசின் முற்களைப்போன்று மனம்.
நிறைகிறது இன்று கவிதைகளின் ரசனைத்துணை!
*
நிறமுமில்லை மணமுமில்லை
திடமுமில்லை இடமுமில்லை
அழுத்தம் உள்ள திசையெலாம்
அலைவேன் ஆனாலும்.
உணர்ந்தாரும் மறந்தாரும்
வாழ்வெலாம் என்னோடு
வையகம் வாழ வைக்கும்
நான் காற்றானவன்.
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2-5-18, 23.04.



கருத்துகள் இல்லை: