31 ஆகஸ்ட் 2022

யுவன் வாழ்க! இசையை ஆள்க!!



தன்னை,
தான் எவன்? என்று கேட்டவன்
தனக்கோர் அங்கீகாரத்தை
தன் தனிவழியில் தானே அமைத்தவன்.
பழகிய இசையை பற்றி நின்றால்
பழைய இசை தானே என்றிருப்பார்கள்
இளையவர் நெஞ்சத்தை வசீகரிக்க
இன்னோர் தடம் தனியே வகுத்தவன்
தந்தை மட்டும் சுயம்புவல்ல
தானும் தான் என்பதை
தன் இசைத் திறத்தால் நிரூபித்தவன்.
கிறக்கம் கொடுக்கும் காதல் பாடல்களில்
அழுகை பிறக்கும் சோகப்பாடல்களில்
இளமை துடிக்கும் குத்துப்பாடல்களில்
இவன் குரல்.. என்றுமே தனிக்குரல்.
பெரிதாக இசை பயிற்சி இல்லை
இசைப்பலகைக்கூட தேர்ச்சியில்லை
மனதின் ஈர்ப்புவிசையோடு பயணித்தான்
திசையெட்டும் ஒளிக்கிறது இவன் பாட்டுத் தான்.
யுவன்,
என்றும் வாழ்க!
இசையை ஆள்க!!
வாழ்த்துடன்
ஜா.மு.
31-08-2020

கருத்துகள் இல்லை: