29 ஆகஸ்ட் 2022

கலைஞருக்கு நினைவஞ்சலி!




அறியா தோருக்கும்
அரை வேக்காடு களுக்கும்
அறிய முடியாத
அரிய அதிசயம் நீ!
அரை நூற்றாண்டு தமிழகம் நீ!
உரை எழுத முடியாத தமிழ் அகம் நீ!
ஆரிய பகை வென்ற
திராவிட திருமகன் நீ!
தேரோடும் திருவாருர் தந்த
திரவியம் தான் நீ!
தாழ்ந்திருந்த தமிழகத்தின்
வீழ்ந்திருந்த தமிழினத்தின்
மாற்ற முடியாத தலையெழுத்தை
மாற்றிடப் பல கையெழுத் தீந்தவன் நீ!
சாதனை தமிழன் நீ!
சாதித்த திராவிடன் நீ!
சோதனை சூழ்ந்த
போதிலெல்லாம்
சோதனைக்கே சோர்வை
தோதாய் அளித்தவன் நீ!
வையகமே வியக்கும்
வைராக்கியன் நீ!
வலிகளை வழிகளாக்கிய
வைரமாய்ந்தவன் நீ!
படித்து... படித்து...
பண்பட்டவன் நீ!
எழுதி... எழுதி...
விண் தொட்டவன் நீ!
விழித்து... விழித்து...
சமூக அறம் காத்தவன் நீ!
விதைத்து... விதைத்து...
சமூக விருட்சமானவன் நீ!
உருகி... உருகி...
தமிழ் வளர்த்தவன் நீ!
பெருகி..பெருகி..
தமிழானவன் நீ!
மூத்தகுடி தலைவனுக்கு
முஹைதீன் பாட்ஷாவின்
நினைவஞ்சலி!

- ஜாமு
2018

கருத்துகள் இல்லை: