22 டிசம்பர் 2022

துபாயில் நாகூர் சதாம் இசை நிகழ்ச்சி


துபாயில் நேற்று (11-12-2022) இளம் இஸ்லாமியப் பாடகர் "தேனிசைக்குரலோன்" நாகூர் சதாம் Nagore Sadham அவர்களின் தீனிசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது. நிகழ்வை கடைசிவரை இன்முகத்தோடு எல்லோரையும் கவரும் வண்ணம் நடத்தி மகிழவைத்தார்.
எமது வரிகளில் சகோதரர் நாகூர் சதாம் பல பாடல்களை பாடியிருந்தாலும் அதில் 2020ல் அன்பர் Sajid Khan இசையமைத்து வெளிவந்த பலராலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற பாடல் "நபியே நான் என்றும் உங்கள் அன்பல்லவா.." பாடலையும் நிகழ்வில் பாடி அசத்தினார். 2016 முதல் சதாம் அவர்களின் இணைப்பில் இருந்தாலும் இணையம் மூலம் தான் தொடர்பும் பாடல் எழுதுவதும் எல்லாம் அந்தவகையில் நேற்றே நேரில் சந்தித்து ஆரத்தழுவிக்கொண்டோம் என்பது மனநிறைவு.
நிகழ்வில் சதாம் பாடி வெளிவந்த மஃரூப் காகா அவர்களின் பாடல்கள் பலவும் பாடி சிறப்பித்தார். மேலும் முத்தாய்ப்பான இசைமுரசின் பாடல்களும் மற்ற பாடல்களும் பாடப்பட்டது. மாஸ்டர் அனீஸ் குழுவினரின் ஆர்கெஸ்ட்ரா எல்லோரையும் கவர்ந்தது.
நிகழ்விற்கு முஹிப்புல் உலமா மஃரூப் காகா Ahmed Mahroof சீரிய முறையில் லேண்ட் மார்க் ஹோட்டலில் ஏற்பாற்பாடுகளைச் செய்திருந்தார். திரளான மக்கள் வந்து சிறப்பித்தனர். மனம் மகிழ்ந்த இனிய இசை மாலையாக இருந்தது மகிழ்ச்சி.
பாடகர் சதாம் இன்னும் நிறைய உயரங்களை அடைய இறைவன் அருள்வானாக.
வாழ்த்துடன்






கருத்துகள் இல்லை: