25 பிப்ரவரி 2011

மனமெல்லாம் மன்னர் மீரா

வரவேண்டும் வரவேண்டுமெனவே

வரம் பெற்று வந்தேனே

மனமெல்லாம் மன்னர் மீராவெனவே

மகிழ்ந்தோடி வந்தேனே


அணையாத ஆவல் கொண்டே

அண்ணலே நான் வந்தேன்

குறை யாவும் இல்லாமல்

இனிநாதா காத்து அருள்வீர்


ஆன்மீக அருள் சுரக்கும்

மேன்மை திருப் பதிக்கு

தேடித் தேடி வந்தேனே

தேனின்பம் தந்து அருள்வீர்


என்னை மறந்தே நானும்

எஜமான் தர்பாரிலே வேணும்

கண்ணே மணியே காதிரே

கல்பாலே அருள்தர வேணும்


பெரிய ஞானங்கள் எதுவும்

பேதை ஒன்றும் அறியேன்

பெரியோர் போதை ஒன்றே

எளியோன் நெஞ்சில் உண்டு


அறியாத ஏழைக் கிங்கு

அறியவை யாவும் அருள்வீர்

தெரியாத நாளை தன்னை

திறமாக்கி திறந் தருள்வீர்


நூற் றாண்டு பலகண்டு

நூரி லங்கும் நூதனமே

நும் நூரின் ஒளியினிலே

சேர்த் தெம்மை அருள்வீரே


எந்தை தாயையும் மற்ற

எல்லா என்குடி மக்களையும்

விந்தையே ஆன்மீகத் தந்தையே

பொல்லாங் கணுகாது காப்பீரே


அர்த்தமுள்ள வாழ்க்கை தன்னை

ஆயுள் தன்னில் வாழ்வதற்கு

அற்பு தங்கள் நிகழ்த்திவரும்

அண்ணலே அருள் புரிவீரே


பொற் பதத்தை போற்றுகின்ற

பொன் னாளாய் என்வாழ்வின்

என் னாளும் ஆவதற்கே

நன்னாகூர் பேரரசே யருள்வீரே

22-02-2011

கருத்துகள் இல்லை: