
வரம் பெற்று வந்தேனே
மனமெல்லாம் மன்னர் மீராவெனவே
மகிழ்ந்தோடி வந்தேனே
அணையாத ஆவல் கொண்டே
அண்ணலே நான் வந்தேன்
குறை யாவும் இல்லாமல்
இனிநாதா காத்து அருள்வீர்
ஆன்மீக அருள் சுரக்கும்
மேன்மை திருப் பதிக்கு
தேடித் தேடி வந்தேனே
தேனின்பம் தந்து அருள்வீர்
என்னை மறந்தே நானும்
எஜமான் தர்பாரிலே வேணும்
கண்ணே மணியே காதிரே
கல்பாலே அருள்தர வேணும்
பெரிய ஞானங்கள் எதுவும்
பேதை ஒன்றும் அறியேன்
பெரியோர் போதை ஒன்றே
எளியோன் நெஞ்சில் உண்டு
அறியாத ஏழைக் கிங்கு
அறியவை யாவும் அருள்வீர்
தெரியாத நாளை தன்னை
திறமாக்கி திறந் தருள்வீர்
நூற் றாண்டு பலகண்டு
நூரி லங்கும் நூதனமே
நும் நூரின் ஒளியினிலே
சேர்த் தெம்மை அருள்வீரே
எந்தை தாயையும் மற்ற
எல்லா என்குடி மக்களையும்
விந்தையே ஆன்மீகத் தந்தையே
பொல்லாங் கணுகாது காப்பீரே
அர்த்தமுள்ள வாழ்க்கை தன்னை
ஆயுள் தன்னில் வாழ்வதற்கு
அற்பு தங்கள் நிகழ்த்திவரும்
அண்ணலே அருள் புரிவீரே
பொற் பதத்தை போற்றுகின்ற
பொன் னாளாய் என்வாழ்வின்
என் னாளும் ஆவதற்கே
நன்னாகூர் பேரரசே யருள்வீரே
22-02-2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக