31 மார்ச் 2011

அமாவாசை

உலகம் புரியாத வயதில்.. தொடர் கவிதைகள் -1


நிலவே – நீ

இறந்து விட்டதாக

எண்ணி நட்சத்திரங்கள்

மெளனம் அனுஷ்டிக்கிறது..!



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




பகைப்படையின்

அத்துமீறலால்

தப்பிக்க வழியில்லாமல் – ஏன்

கொஞ்சம் கொஞ்சமாக

சிதைத்துக் கொண்டாய்

நிலா தளபதியே!

உன்னைக் காணாமல்

எங்களைப் பார்த்து

வெள்ளை விளக்குகள்

காட்டி ஒளிர்ந்து

உதவி..உதவி..என்றழைக்கின்றனர்

உன் மீண் வீரர்கள்!


இந்த இரு நிலாக்கவிதைகளும் எழுதிய காலம் 1994 மே மாதம் நான் +2 படிக்கும் போது..16 வருடங்களுக்கு முன்

- இன்னும் புரியும்

கருத்துகள் இல்லை: