
உலகம் ஓர் மாயை
அடிக்கடி மறப்பதனால்
உலகப்பேய் வடிவாய் நீ!
அன்பு பாசம் அனைத்தும்
வானவில்லும் கானலும் போல..
எதையும் பார்த்து பயப்பட நேர்வது,
மனிதனாக பிறந்ததன் பாபம்!
நெருங்கிய உறவுகள்
உண்மையில் தங்கச்சங்கிலி விலங்கு!
முதல் செமஸ்டர் காலம், 1995ல் எழுதியது அகவை 17.
என் வாழ்வின் அன்றாடம் உலகின் நிகழ்வுகள் ஏற்படுத்தும் மன அதிர்வுகளுக்கு தக்க என் மனக்கவி உதடு கவிதை வாசிக்க ஆரம்பித்து விடும், எத்தனையோ எழுதி.. எத்தனையோ எழுதாமல்… இப்படித்தான் என் உணர்வுகளின் கவி முட்டைகளின் நிலை. அப்படித்தான் மேற்கண்ட கவியும் என் அந்நாளய தினத்தில் ஏதோ ஒரு உலகியலின் மோசமான நிலைகளை சிந்தித்ததன் அல்லது சந்தித்ததன் விளைவு!
-இப்படிக்கு
என் அந்த கால கவியுடன் உங்கள்
ஜே.எம்.பாட்ஷா
- இன்னும் புரியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக