11 பிப்ரவரி 2012

நீலக்கடலும் அலையும்..!



நீயும் நானும் சேர வேண்டும்
நீலக்கடலும் அலையும் போல –நம்
அழியாக் காதல் அர்த்தம்பெற வேண்டும்
ஒழியா எதிர்ப்புகள் வந்தாலும் கூட,
பாதகங்கள் கூடினால் என்ன – சிலர்
பாயும் புலியாய்  மாறினால் என்ன!!

நீ பூவாய் மலர்ந்தாய்
நான் வண்டாய் வலம்வந்தேன்
நீ நிலவாய் உலவினாய்
நான் வானமாய் இடந்தந்தேன்

நான் உன்னை பெண்ணாய் பார்க்கவில்லை
என் கண்ணாய் தான் பார்க்கிறேன் கண்மணியே! 

அன்பே நீ!
தேடிப் பார்க்க நீ ஓர் ஆழ்கடல் முத்து
சூடிப்பார்க்க சுகந்தம்கமழ் மலர்
ஓதிப்பார்க்க நீ ஓர் அகராதி
தொட்டு ருசிக்க நீ திவ்யத்தேன்
இட்டுக்கொள்ள நீ மென்பட்டு

ஓடையில் மீன் போல
உன்னில் நான் நீந்த வேண்டும்
கோடையில் இளநீர் போல
உனை தீர அருந்த வேண்டும்


ஓடி அலைவோம் தென்றல் போல
கூடிப்பறப்போம் சிட்டுக்குருவியாய்
பாடிக்களிப்போம் பசுங்கிள்ளைகளாய்
நீடித்த மகிழ்வில் தொடர்வோம் வாழ்வை!


-ஜே.எம்.பாட்ஷா

காலம் 1997                                                                                                        (இன்னும் புரியும் )

 உலகம் புரியாத வயதில் கவிதைகள் .. - 

கருத்துகள் இல்லை: