04 ஜூலை 2012

"அஸ்ஸய்யித் மெளலானா மவ்லவி செய்யித் அலவி ஹஜ்ரத்" அவர்களின் நல்லடக்கம்

நேற்று(03-07-2012 ) மாலை மறைந்த மஹான் மகா கண்ணியம் பொருந்திய இஸ்லாமிய பேரறிஞர் அண்ணலாரின் அஹ்லும் பைத்தென்னும் புனித திருக்குடும்பத்தில் வந்துதித்த‌ அஷ்ஷெய்கு மௌலானா மௌலவி ஹஜ்ரத் செய்யிது அலவி பாஜில் மன்பஈ கிப்லா காதிரிய்யு அவர்களின் புனித ஜனாஸா இன்று காலை தஞ்சை மாவட்டம் வழுத்தூர் பிரசித்தி பெற்ற 465 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த தர்ஹா சரீபில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் மகான்களின் நிலையைப்பற்றியும்,  மனித வாழ்வின் எதார்த்தத்தை பற்றியும் தேங்கை சர்புத்தீன்,வி.ஏ.ஓ.அப்துல் காதர் மற்றும்  எஃப்.அப்துல் கரீம் உட்பட அறிஞர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்ந்த்தினர். ஹஜ்ரத் அவர்களின் மகனார்களான மெள்லானா முஹம்மது அலி, மெளலானா சித்தீக் அலி உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர். 

ஹஜ்ரத அவர்கள் மிகப்பெரிய ஞானியாக வாழ்ந்து வந்த தன்னிகரற்ற தவஞான சூஃபி, எதார்த்தத்திலும் எதார்த்தமாய் உலகியல் வாழ்வை வாழ்ந்து.. நாடி வருபவர்களுக்கெல்லாம் ஆன்மீக போதத்தையும், சிறப்புயர் நல்துஆ வையும் அள்ளி வழங்கி அன்பை சொறிந்து வந்த மிகத்தூய ஆன்மா ஆவார்கள்.

"ரலியல்லாஹு அன்ஹும் வரலு அன்ஹு" அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான் அவர்களும்  அல்லாஹ்வை பொருந்திக்கொண்டார்கள். - அல் குர்ஆன்










































நன்றி : மு.மு.ஜா.சா

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

நிகழ் பிடித்தான் பாவைபிரியன் சொன்னது…

engal kanavugalilum ninaivugalilum neengathu vaalum engal abba..
vaalvaangu vaalntha oru magaan..