01 நவம்பர் 2015

அபுஹாஸிமா





பெயர் அபுஹாஸிமா..குமரி மாவட்டம் கோட்டாறு
சமூக சிந்தனையில் இவர் காட்டாறு அதன் உந்துதலினாலேயே 
நமது முற்றம் மாத இதழினை போராட்ட குணத்தோடு பல சவால்களுக்கு மத்தியிலும் நடத்தி வந்தவர். 

சிறப்பான கவிஞராகவும், பன்னூல் ஆசிரியராகவும் வலம் வருபவர்.
உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள், அண்ணலே யா ரசூலல்லாஹ், "பெட்டகம்" குமரி மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம் உள்ளிட்ட நூல்களை எழுதி உள்ளார்.

இன்னும் பல நூட்களை வெளியிட இருக்கிறார். இவரது நூற்களில் நல்ல தமிழ் நம்மை மயக்கும்..சமூக உணர்வு நம்மை செதுக்கும்.. அரிய தகவல்கள் பல நமக்கு கிடைக்கும்.

மட்டுமல்லாது சமூக நல ஆர்வலர்.. நிலத்தில் நிம்மதியும் அமைதியும் தழைக்க வேண்டும்.. எல்லா தரப்பு மக்களுடனும் சிறப்பான உறவு தழைத்தோங்கி பேதங்கள் பொய்த்து போக வேண்டும் என பல வகையில் எழுத்தாலும், பேச்சாலும் முயன்று வருபவர்


தற்போது முகநூலில் நியாயத்தின் குரலை எந்த ஒரு சமரசமும் இன்றி தொடர்ந்து ஒலித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்,

நல்லவர் வாழ்க!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

மார்ச் 7-2012 அன்று முகநூலில் எழுதியது.

கருத்துகள் இல்லை: