09 நவம்பர் 2015

பிகாரில் நிதிஷ்-லாலு வெற்றி குறித்து - 09-11-2015

புகார் சொல்லி பயனில்லை
இனி யார்மீதும்,
பிகார் தீர்பெழுதிவிட்டது
பகார்* செல்லுங்களென!
கோபாலும் பைசலும்
அன்னை தேசத்தின் பிள்ளைகள்.
பரம பதம் அழைக்கிறது
புறப்படுங்கள்
இராம பக்தர்களே???
இனி இந்தியர்களை
ஏய்க்கமுடியாது!
****
பிடித்திருக்கும் மதமே
ஒருநாள் வதம் செய்யும்
இவர்களை!
பிடித்திருக்கும் பீடையே
ஓருநாள் பதம் பார்க்கும்
இவர்களை!
அடுத்துவரும் தோல்விகளில்
நடித்திருக்கும் விதம் ஜீவசமாதி
இவர்களுக்கே!
தொடுத்துவரும் மாலைகளை
படுத்த விதம் சூடும்பிணங்கள்
இவர்களே!
****
மதத்தால் மனங்களை கூறுபோட்டார்கள் -இன்று
மாட்டால் நாட்டையும் கூறுபோட துணிந்தார்கள்
தூங்கும் பூனைகள் விழிக்கட்டும்..
உலகம் இருட்டவில்லை விழி'காட்டும்'.
பிகாரின் 'தீ' இந்தியா முழுமைக்கும் பரவட்டும்
தகா(த) பார"தீய" வன்மங்கள் வேரறுந்து சாயட்டும்
லா..லா..லா..லு... லா....லு...!!!
****
மதவாதமும், மாபாதகமும் அடிசறுக்கியதில்
தேசபக்தர்கள் எல்லோருக்கும் எவ்வளவு மகிழ்ச்சி.
அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம்
இந்த தேசமுழுக்கவும் இதன் நீட்சி!
பாரத் மாதா கி..... ஜே!
****
சமயம் பார்த்து 
கழுத்தறுக்கும் இவர்களது
சமயச் சார்பு!
****


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: