20 செப்டம்பர் 2017

நாட்டில் நீதி

கேட்டு எழுதப்படும் தீர்ப்புகளும்
நோட்டுக்காக எழுதப்படும் தீர்ப்புகளும் தானே
நாட்டின் நடப்பாய் இப்போதெல்லாம்
வாட்டி வதம் செய்து துவைக்கிறது
ஓட்டு போட்ட மக்கள் நமக்கோ
வேட்டு வைத்து நீதிதேவதையின் கணகள் கட்டப்பட,
நீட்டப்படுகிறது அநீதியின் கரங்கள்.
கூட்டு சதி இதுபோல நடக்கும்
நாட்டில் குமாரசாமி முகங்களுக்கிடையே
காட்டப்படும் அவ்வப்போதைய குன்ஹாகளின் முகங்களால்
ஈட்டப்படலாம் இன்னும் இங்கே நீதி என்றே
வாட்டத்துடன் பிரஜைகள் நாம் நம்பிக்கை
கூட்டி பேந்த..பேந்த காத்து நிற்கிறோம், தேசத்தில்
ஏடிஎம் வரிசையில் நின்றதைப் போல.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: