13 செப்டம்பர் 2017

அவன் கொடுப்பான்!

பரமனிடம் பாமரன் நமக்கோ
தேவையானதைக் கேட்கக்கூட
தெரியாதென்பது தான்
தெரியாத பேருண்மை.
எதைக் கேட்டாலும்
எப்படிக் கேட்டாலும்
மலை போல தங்கத்தையோ
மகுடம் தரித்த பேரரசையோ
தாவெனக் கோரினாலும்
பெருமாண்ட பேரிறையோன்
அருளாகவே இருப்பவனவன்
அண்ட சராசரமாகி நிற்பவன்
அவனுக்கது அற்பமே..
ஆகையால்....
நம் பிக்கை வைத்து
நம் கைகளை உயர்த்தினால்
வாட்டத்துடன் கேட்டதை
தேட்டத்துடன் மகிழ்ந்து
அருளாமலா போய்விடுவான்
பெரிதென நாம் நினைப்பவை யாவும்
பெரிதல்லவே, அற்பமன்றோ அவனுக்கு
நிரப்பமாக தருவதினால்
நிரம்பியதிலேதும் குறையாத வனவன்
குறைவாக கொடுப்பதை
குறையாக நினைப்ப வனவன்
உன்னை யன்றி
கேட்பதற்கும் யாருளர்?
தருவதற்கும் யாருளர்?
தா என் தாயே..
தா என் தயையே..
தா என் இறையே..
ஜா. முஹையத்தீன் பாட்ஷா
13-09-2017, அஜ்மான். அமீரகம்.

கருத்துகள் இல்லை: