29 ஏப்ரல் 2019

விதித்தது

கதிரில் விளைந்ததெல்லாம்
குதிருக்குள் செல்லாது
வெள்ளாமை ஆனதெல்லாம்
வீடுவரை வந்திடாது
காகம் குருவி கொத்தியதும் கொரித்ததும் போக
வாரி அள்ளும் போது சிந்தியது போக
மூட்டை கட்டும் போது கொட்டியது போக மீதம் தான் நமக்காகும்
கணக்கு போட்ட படியெல்லாம்
கண்டிப்பாய் வாழவே முடியாது
எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும்
எப்படி பிணங்கியது என ஓர்த்தாலும்
வாழ்வே நகராது
வாழவே முடியாது
கூடுதலோ குறைதலோ
கிடைத்ததற்கு சுக்கூர் சொல்வாய்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

5-5-17

கருத்துகள் இல்லை: