18 பிப்ரவரி 2019

எனது உள்ளத்தரசியின் தாயார் நினைவு தினம்

அன்புள்ள தாயே
எங்கே தான் நீயே...

உன் முகம் பார்க்காது
தினமும் எழ வைத்தாயே
ஏங்கிடும் நினைவுகளால்
நிதமும் அழவைத்தாயே!

எனக்கு விடிகிறதென்றால்
சூரியனாய் நீ தான் இருந்தாய்
உன் வெளிச்சம் தானே
எல்லாம் விளக்கியது தாயே!

எனக்கு இரவென்றால்
நிலவென நீ தான் இருந்தாய்
எனக்கான ஆறுதல் வடிகால்
நீயாய் இருந்தாய் தாயே!

எனக்கு என்ன தெரியும்
உன்னை தெரியும்
உன்னை தான் தெரியும்
உன்னை மட்டும் தான் தெரியும் தாயே!

நீ என்ற உலகில் தான்
நான் வாழ்ந்திருந்தேன்
நினைத்திராது அந்த உலகமே
திடீரென அதிருமெனறால்
எங்கே போவேன் தாயே!

எந்னை நீ
பெற்று விட்ட பிறகும்
நானே பிள்ளைகள்
பெற்றுவிட்ட பிறகும்
பக்கத்தில் நீ இருந்ததால்
உன் பேரன்பின் கருவறையில்
கதகதப்பாக இருப்பதாகத்தான் உணர்ந்திருந்தேன்!

அந்தக் கருவறை சுவாசம்
காலமெல்லாம் கிடைக்குமென்று
நினைத்திருக்கையில்,
காலம் இப்படியொரு
அகால கொடுந்தீயைப் பற்றவைத்து
கொடுமையாய் உனைப்பிரித்ததே தாயே!

பிரிவின் தீயும்
நினைவின் தீயும்
தினம் தினம் எறிய
திரும்பிட மாட்டாய் எனினும்
திரும்பத்திரும்ப அழைக்கிறேன்
உன் பிரியப் பிள்ளை!

தாயே!
ஆசையோடு அணைத்தெனக்கு
அன்பின் இதழ் குவித்து
ஒரு முத்தமாவது தந்து செல்லேன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


இன்று எனது உள்ளத்தரசியின் தாயார் நினைவு தினம், அவர்களுக்கு இறைவன் பெருங்கிருபை செய்வானாக! இறைத்தூதர் அருளாசியினால் நிறை சாந்தி நிலவுவதாக.

கருத்துகள் இல்லை: