21 அக்டோபர் 2019

கவிதை என்பது...

உணர்வும் மொழியும் கூடி பிறக்கும் குழந்தை
எண்ணங்கள் வண்ணம் பெற்று 
ஆடிடும் மொழி வழி நடனம்
கவித்துவத்தோடு நாம் மொழியை சுவைக்க வேண்டி ஆக்கிடும் வித வித மொழிச் சமையல்
சலிப்பூட்டும் சொற்களை பொருளை புகுத்தாமல் அதை கவனமாக புதிய முறையில் பயன்படுத்தி, புதிய பொருள்ல்ல.. புதிய உலகிற்கே கொண்டு போவது போலிருந்தால் ரசனை மிகும்.
ஆதலால் வெறும் சொற்களை அடுக்குதலோ அல்லது கட்டாய பொருட் திணிப்போ கவிதைக்கு உடன்பாடானது அல்ல.
உணர்வை, துய்ப்பை, அனுபவத்தை மொழியின் வழியே சுவை கூட்டி சொல்லும் போது ஓரெழுத்து கூட அருங்கவியாகி நிற்கும்
எந்த சூழலில் கவிதை வெளிப்படுகிறதோ அவ்வாறே வெளிப்படுத்தும் போது இது மட்டும் தானெனும் கட்டுப்பட்ட பொருள் எல்லைக்குள் அடக்கிக்கொள்ளாது அது படிப்பவரின் அறிவுக்கேற்ப மனதினுள் விரியும்.
பெற்ற உணர்வை உற்றவாறே மொழிதல் கவிதை.
-ஜா.மு.
சென்ற ஆண்டில் இதே நாள் கவிதை குறித்த விவாதத்தில் நானிட்ட பின்னூட்டம்
முகநூல் இணைப்பு
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: