21 அக்டோபர் 2019

குறளும் - மகளும்:

குறளும் - மகளும்: முகநூல் இணைப்பு

திருக்குறள் தமிழர் தம் பெருமை, திருவள்ளுவர் தெய்வப்புலவன் என்ற பெருமிதம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது, திருக்குறளை நம் பிள்ளைகள் அதிகமதிகம் மனனம் செய்து அது அவர்களின் சிந்தனையோடு சேர அவர்கள் குறள் நெறிப்படி வாழ வழி வகுக்கும். அவ்வாறான திருக்குறளை நம் பிள்ளைகள் கற்று அதற்கு தக நிற்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு யாரும் உறுதுணை புரிந்தால் அது எவ்வள்ளவு மன நெகிழ்ச்சியாய் இருக்கும் அது தான் இன்று நடந்தது. அந்த நிகழ்வு மனதை மகிழ்ச்சி வெள்ளத்தில் நிறைத்தது.
ன்று கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் அரிமா சங்கம், குடந்தைத் திருக்குறள் அரிமா சங்கம், திருக்குறள் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை இன்னும் சில அமைப்புக்களும் சேர்ந்து நடத்திய திருக்குறள் போட்டியில் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் பாத்திமா ஜைனப் கலந்து கொண்டு குறள் ஒப்பித்து பட்டயம் பெற்றிருக்கிறாள்.
பல பள்ளிகளும் பல மாணவர்களும் பங்கெடுத்த இந்த போட்டியின் பரிசு முடிவு பிறகு அறிவிக்கப்படும்.
போட்டி நடக்க இருக்கிறது என அறிவிக்கப்பட்ட உடனேயே வீட்டில் அதைப்பற்றி சொல்லி ஆர்வமுடன் பெயர் கொடுத்த ஜைனப், அவள் தாயாரின் பெருந்துணையுடன் (அதாவது எங்க வீட்டுக்காரம்மா)
முதல் நாளிலேயே குறித்துக்கொடுத்த பத்து திருக்குறளை உடனே மனப்பாடம் செய்துவிட்டாள், அப்படியா.. உடனே மனப்பாடம் செய்து விட்டாயா என்று அதை பதினைந்தாக ஆசிரியர் உயர்த்த மீண்டும் சிரமமின்றி மனப்பாடம் செய்து மிக இலகுவாய் சொல்லிக்க்காட்டினாள். பிறகும் ஐந்தைக்கூட்டி இருபதாக்க அதையும் உடனே மனனம் செய்து குறிப்பிட்ட நேர வரையறைக்கு முன்னமே முடித்து அசத்தினாள், அதையும் கூட்டலாமா என ஆசிரியர்கள் சொல்ல பிள்ளையை சிரமப்படுத்த வேண்டாமே என்ற எங்களின் எண்ணத்திற்குக்கொப்ப இருபதே இறுதியானாலும் அதிலும் ஒரு குறளை அவளே ஆர்வத்துடன் இணைத்து இருபத்து ஒன்றாய் ஒரு நிமிடம் 48 வினாடிகளில் ஒப்பித்து முடித்தாள்.
இது போன்ற நிகழ்வுகள் பிள்ளைகளுக்கு மிக உந்துதலாய் மன உற்சாகத்தை கூட்டி அவர்களை நன்முறைகளில் வழிநடந்த்தாட்டும், கூச்சம் போக்கும் சாதனைகளை புரிய வழிவகுக்கும்.
இவ்வரிய வாய்ப்பினை வழங்கியதற்காய் மனமுவந்து அலிப் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கும் அதன் சிறப்புமிகு தாளாளர் Basheer Ahamed Rabbani அவர்களுக்கும் மனமார்ந்த நனறிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இதற்காய் முழுமூச்சாய் உழைத்த என் உள்ளத்தரசிக்கும் மனதால் நன்றி சொல்ல கடமைப்பட்டவன்.
இதற்கு முன்னர் 2015 எனது மகன் அகமது நளீர் பாபநாசம் RDB பள்ளியில் படிக்கும் போது இது போன்ற நிகழ்வில் குறள் ஒப்பித்து மாவட்ட துணை ஆட்சியர் கையால் பரிசில் வென்றதையும் இப்போது நினைத்து இன்புறுகிறேன்.
நம் பிள்ளைகள் வாழ்வு சிறக்கட்டும்!
நமதினிய நற்றமிழ் எங்கும் செழிக்கட்டும்!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: