மகனை மீட்டிட
யுகமாய் தொய்வில்லா போராட்டம்!
நடந்து தேய்ந்தது அவர்
கால்கள் மட்டுமல்ல..
வாழ்க்கையும்
நம்பிக்கையும் தான்.
தாய்மையின் எல்லையில்லா
போராட்டத்தின் நீட்சி வடிவம்
அற்புதம்மாள்
என்றாயினும் சூதெலாம்
வென்று வருவான் மகனென்றே
பொழுதுகள் தோறும்
அழுத கண்களோடு..
சிறைக்கொட்டடியில் இட்ட
"சட்டத்தின் மீதே" நம்பிக்கை வைத்து
அரைநூற்றாண்டாய் வழக்காடி
தளராது தளர்ந்த தாய்!
எதார்த்தத்தில்
சாமானியர்களை
சட்டம் சட்டை செய்வதில்லை
அவர்களுக்கு வெட்டும்
பலியாடுகள் என்றுமே தேவை!
ஒன்றியத்தின் எந்த
மன்றங்களிலும்
உணர்வுகளின் வலியோ
உண்மையின் ஒளியோ
எத்தி எதிரொலிக்க
வாய்ப்பே இல்லாமல் போனது;
வடக்கின் இடக்கை அரசியலுக்கு
வாகாய் இரை சிக்கியது!
பொறுப்பில் இருப்போர்
அரசியல் மட்டும் நடத்துகின்றார்;
கவனமாய் அவரவர்
பிழைப்பை மட்டும் பார்க்கின்றார்;
அதனால் அவர்கள்
வயிறு நிறைகிறது
வாழ்வு ஓடுகிறது
அது போதாதாதா?!
இவர் நெஞ்சம்
நிறைக்கத்தான் ஆளுமில்லை!
இவர் துன்பம்
இறைக்கத்தான் காலமில்லை!!
பேரறிவாளனை
பெற்றவள்
பெறப்போவது எந்நாள்???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக