25 ஜூன் 2020

செட்டியார் தாஜுத்தீன் மாமு

பொதுவாழ்வில் தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொண்டு சமூகப்பணி ஆற்றியவர் செட்டியார் தாஜுத்தீன் மாமு. திமுகவில் தீவிரமாக இருந்து பிறகு தாய்ச்சபை முஸ்லிம் லீக்-கில் இணைந்து தஞ்சை மாவட்டம் வழுத்தூர் பிரைமரிக்கு பக்க பலமாய் இருந்தவர், தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் போன்ற பதவியிலும் இருந்திருக்கிறார். தான் இறந்தால் உடலில் பிறைக்கொடி போர்த்த வேண்டும் என்ற அளவிற்கு அர்பணிப்போடு இருந்து தாய்ச்சபைக்கு தொண்டூழியம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும்,வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலின் முத்தவல்லியாய் பணி செய்தவர், வஹ்ஹாபியத்திற்கு எதிரான சுன்னத் வல் ஜமாத் கொள்கைகாக உணர்வோடு உழைத்தவர். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பள்ளிவாசலில் நடக்கும் ஊர் கூட்டங்களில் ஏதேனும் சலசலப்பென்றால் இவரின் ஒரே கத்தல் போதும் சபை அமைதி பெறும். நிறைய வாழ்வின் அனுபவங்களை சுமந்திருந்தவர். அவரது மறைவு பெரும் வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக; அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. --வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

இப்புகைப்படம் நாலு கொடி கந்தூரிக்கு தயாராகும் நாளில் 2014 ஜனவரியில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் எடுக்கப்பட்டது .




கருத்துகள் இல்லை: