08 ஜூன் 2020

ஒளிமிகுந்த கிழமைகள்

எங்களின் இருபத்தேழாம் கிழமைகள் எல்லாம் ஒளிமிகுந்தவை,
ஏற்றிய மெழுகுவர்த்திகளின் தீபத் திருசுடர்கள் இன்னும் பிரகாசமாகத்தான் எரிகிறது, மனதின் திண்ணை முற்றத்திலெங்கெனும்.
நண்பர்கள் வந்து வந்து மகிழ்ந்து மயங்கி ஒளியழகு பருகுவார்கள்.
புன்னகையுடன் ஒளியேற்றிக்கொண்டு ஒளிமிகுந்து வழியெல்லாம் மகிழ்ச்சியின் கிரணங்களை பரப்பியவாறே குதூகளத்தை கொடுத்துச் செல்வார்கள் அந்தக்கால நாங்கள் மகிழ்ச்சியின் பெருஞ்செல்வர்கள்.
எங்களின் அந்த கால இருபத்தேழாம் கிழமைகள் எல்லாம் அந்தகாரமாக இருந்ததில்லை அவைகள் ஒளிமிகுந்தவை. கத்ருடைய இரவுகள் கதிர் இரவுகளாகத் தான்இருந்தன. அதன் ஞானப்பேரொளித் திரிகள் என்றும் அணையாதவை.
நாங்கள் அதன் வெளிச்சத்தின் வட்டத்தில் இன்றும் கதகதப்பாக ஒளிர்கிறோம், ஒளியோடும் அழகோடும்.
ஜா.மு. 20-05-20 9:18pm
ரமலான் 27ஆம் நாள் இரவு குறித்த கவிதை. இதை "லைலத்துல் கத்ர்" என்று அழைப்பர். கத்ர் என்றால் கண்ணியம் மிகுந்த அல்லது சிறப்பு மிகுந்தது என பொருள் படும். இப்பெரும் இரவில் இஸ்லாமிய பெருமாட்டி ஒருவர் தன் கைகளால் நெய்து அன்பளிப்பாக அளித்த ஆடை என்பதனால் நாம் உடுத்தும் கதர் ஆடைக்கு அண்ணல் காந்தி அடிகள் அப்பெயர் இட்டதும் வரலாறு.

முகநூல் இணைப்பு

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: