31 மே 2022

மெய்யே மேவ!

சற்று முன் திண்ற ஆப்பிளில் தான்
எத்தனை தித்திப்பு...
இயற்கைக்கு..
இறைசக்திக்கு நன்றிகள் நவின்றேன்
சற்றுமுன் தொலைபேசியில் ஒலித்த
அறிஞர் குரலில் தான் எத்தனை கனிவு...
பெருந்தன்மை.. பக்குவப்பண்பு
இவைகளை கண்டு வியந்து நின்றேன்
சற்று முன் அழைத்த
எதார்த்த நண்பரின்
இயல்பான கரிசனத்தில் தான்
எத்தனை உண்மை..
நலவிரும்பிகள் எங்கிருந்தும் ஆதரவு கொடுப்பர்..
முலாம் பூசிய பேச்சுகள் இருக்காது...

பொய் பொய்த்திருக்க
மெய்யே மேவ கண்டுகொண்டேன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: